கர்நாடக மாநிலத்தின் விஜயாப்புரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் பிள்ளைப்பேறுக்காக பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை பெய்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் துணியை வைத்து தைத்துவிட்டனர்.
ஆறு மாதங்களுக்குப் பின்னர் வயிற்று வலியால் அவதிப்பட்ட அந்தப் பெண், ஒரு மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் உள்ளே துணி இருந்தது அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
ஷாகின் உத்னால் (வயது 28) என்ற அந்தப் பெண் அவருக்கு சிகிச்சையளித்த
மருத்துவர்களிடம் முறையிட்டார். அப்போது கவனக்குறைவால் இதுபோன்று நடந்துவிட்டதாக, ஷாகினிடம் மருத்துவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
மேலும் அறுவை சிகிச்சை மூலம் வயிற்றில் இருந்து துணியை அகற்றினர்.
கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஷாகினின் உறவினர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.