இந்தியாவில் 50 வயதைக் கடந்த 260 மில்லியன் பேருக்கு தடுப்பூசி

இந்­தி­யா­வின் தடுப்­பூ­சித் திட்­டம் வேக­ம­டைந்து வரு­வ­தால் 50 வய­துக்கு மேற்­பட்­டோ­ரைக் கவ­னிக்க முடிவு செய்­யப்­பட்டு உள்­ளது. நாடு முழு­வ­தும் 50 வய­தைக் கடந்த சுமார் 260 மில்­லி­யன் பேருக்கு தடுப்­பூசி போட அதி­கா­ரி­கள் தயா­ராகி வரு­கின்­ற­னர்.

தற்­போது முதற்­கட்­ட­மாக சுகா­தா­ரப் பணி­யா­ளர்­க­ளுக்­கும் முன்­கள ஊழி­யர்­க­ளுக்­கும் தடுப்­பூசி போடப்­பட்டு வரு­கிறது.

வரும் வாரங்­களில் இந்த நட­வ­டிக்கை வேக­ம­டைய இருப்­ப­தால் இது­வரை தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத அத்­த­கைய பணி­யா­ளர்­கள் விரைந்து முன்­வ­ரு­மாறு நிதி ஆயோக் அமைப்­பின் சுகா­தார உறுப்­பி­னர் டாக்­டர் வி கே பால் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

தடுப்­பூசி மூலம் நோய் எதிர்ப்­பாற்­றலை மக்­க­ளி­டம் பர­வ­லாக்க அடுத்­த­கட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் எளி­தில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய மக்­க­ளுக்கு தடுப்­பூசி போடும் நட­வ­டிக்கை விரை­வில் தொடங்­கும் என்­றும் அவர் கூறி­னார்.

“அந்த வகை­யில் ஐம்­பது வய­தைக் கடந்­தோ­ருக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­படும். வேறு வகை­யான நோய்த்­தொற்­று­டன் இருக்­கும் இளை­யோ­ரும் அந்­தப் பட்­டி­ய­லில் சேர்க்­கப்­ப­டு­வர்,” என்றார் அவர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!