முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார் பிரதமர் மோடி

இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று (மார்ச் 1) தொடங்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.

புதுச்சேரியைச் சேர்ந்த தாதி நிவேதாவும், கேரளாவைச் சேர்ந்த மற்றொரு தாதி ரோசம்மா அனிலும் பிரதமர் மோடிக்கு தடுப்பூசி போட்டனர்.

தற்சார்பு கொள்கையில் உறுதி கொண்ட பிரதமர் மோடி கோவாக்சின் தடுப்பு மருந்தை எடுத்துக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது என பாரத் பயோடெக் நிறுவனம் கூறியுள்ளது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்ட் என்ற கொரோனா தடுப்பு மருந்தையும், ஐசிஎம்ஆர், புனேவில் உள்ள வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் எனும் தடுப்பு மருந்தையும் தயாரித்துள்ளன.

இந்த இரண்டு தடுப்பு மருந்துகளும் இந்தியாவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில் கோவாக்சின் தடுப்பூசி முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நிறுவனத்தின் உதவியில்லாமல் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டது கோவாக்சின். எனினும் கோவாக்சின் தடுப்பூசி குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பின.

அந்த தடுப்பூசியின் மீதான முழுமையான சோதனைகள் நடத்தி முடிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது. ஆனால் இதனை கோவாக்சின் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!