இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 12,286 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,124,527ஆக அதிகரித்துள்ளது.
கொவிட்-19 காரணமாக நேற்று ஒரே நாளில் 91 பேர் மாண்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 157,248ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து 12,464 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டது.
இதுவரை மொத்தம் 10,798,921 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துவிட்டனர்.
தற்போது 168,358 பேர் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை 14,854,136 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.