இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 14,989 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,139,516ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனாவால் ஒரே நாளில் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 157,346ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து 13,123 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,812,044ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா கிருமித்தொற்றுக்கு தற்போது 170,126 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை 15,620,749 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.