இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் வாக்குப்பதிவின்போது இடம்பெற்ற மோதலில், மத்திய பாதுகாப்புப் படையினர் சுட்டதில் நால்வர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்கத்தில் இன்று (ஏப்ரல் 10) நான்காம் கட்டமாக 44 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.
இந்நிலையில், கூச் பிகார் மாவட்டத்தில் சீத்தல்குச்சி பகுதியில் இருந்த வாக்குச்சாவடிக்கு வெளியே மோதல் வெடித்ததாகச் சொல்லப்படுகிறது. உள்ளூர்வாசிகளின் தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பாதுகாப்புப் படையினர் அவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் நால்வர் மாண்டதைத் தொடர்ந்து அவ்வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.