புதுடெல்லி: "தவறுகளை திருத்திக்கொள்ளவே நீதிமன்றங்கள் கடுமையான வார்த்தைகளை பயன் படுத்துகின்றன. நீதிபதிகள் கடுமையான வார்த்தைகளை கூறுகிறார்கள் என்றால் அதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்," என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்ற அமர்வு கடுமையாகக் கூறியுள்ளது.
தேர்தல் ஆணையத்திற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் கூறிய கடுமையான கருத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் முறையீடு செய்தது.
கொரோனா தொற்றுநோயின் கொடிய இரண்டாவது அலைக்கு மத்தியில் வாக்கெடுப்புகளை நடத்தியது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கூறிய கருத்து, தேர்தல் ஆணையத்தை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தனது மனுவில் கூறியிருந்ததாக மாலை மலர் தெரி வித்து. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
இதனை நீதிபதிகள் டிஒய் சந்திரசூட், எம்ஆர் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமலே வாய்ப்பு தராமலே சென்னை உயர் நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பேசிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், "உள்நோக்கத்துடன் உயர் நீதிமன்றம் கருத்து கூறவில்லை, கருத்துகளை சரியான முறையில் எடுத்துகொள்ளுங்கள்," என்று தேர்தல் ஆணையத்தை அறிவுறுத்தினர்.
"கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறினால், அந்தத் தவறை சரி செய்ய முயற்சி செய்யுங்கள். நீதிமன்றத்தில் நடப்பதை செய்தியாக்கும்போது நீதிபதிகளை மேலும் கண்ணியமாக செயல்படவைக்கிறது," என்றும் நீதிபதிகள் கூறினர்.
கடந்த வாரம் கொரோனா தடுப்பு விதிமுறைகள் தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர்.
அப்போது, "கொரோனா 2ஆம் அலை பரவலுக்கு தேர்தல் ஆணை யமும் ஒரு காரணம் என்று கூறினர். மேலும், தேர்தல் நேரத்தில் கொரோனா பரவலைத் தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளுக்காக தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றச்சாட்டுகளை சுமத்தினாலும் தவறில்லை என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக குற்றம்சாட்டியிருந்த னர். இதனால் தேர்தல் ஆணையம் இப்படி பொங்கி எழுந்துள்ளது.