‘மனைவியைக் காப்பாற்றுங்கள்’ என்று கதறி அழுத கணவர்

இந்தியாவின் காஸியபாத் நகரில் கிருமித் தொற்று கட்டுக்கடங்காமல் பரவும் சூழ் நிலையில் நேற்று சீக்கிய கோயிலுக்கு வெளியே மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட தனது மனைவியைக் காப்பாற்றுமாறு கதறி அழுதார் முகேஷ் பரத்வாஜ். அவரது மனைவிக்கு சாலையோரமாக உயிர்வாயு அளிக்கப்பட்டது. இந்தியாவில் உயிர்வாயு தோம்புக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா உதவிக்கரம் நீட்டியுள்ளன. கத்தார் நேற்று 300 டன் எடை உள்ள மருத்துவ உதவிப் பொருட்களை இந்தியாவுக்கு அனுப்பியது. சிங்கப்பூர் ஏற்கெனவே இந்தியாவுக்கு உயிர்வாயு கலன்களை அனுப்பி வைத்தது. 'சிக்கி' எனும் சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழில்சபையும் 'லிஷா' எனும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மரபுடைமை சங்கமும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் கீழ் நிதி திரட்டி வருகின்றன. இதற்காக லிட்டில் இந்தியாவில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!