புதுடெல்லி: இந்தியா-பங்ளாதேஷ் எல்லையில் கள்ள ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வந்து இந்தியாவுக்குள் புழக்கத்தில் விடும் கும்பலைச் சேர்ந்த இருவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் இந்தியாவுக்குள் கள்ளநோட்டு கொண்டு வரும் மிகப்பெரிய கும்பலைப் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் கள்ள ரூபாய் நோட்டுகள் துப்ரு என்னும் எல்லைப் பகுதி வழியாக இந்திய எல்லைக்குள் கொண்டு வரப்படுவதும் கண்டுபிடிக்கப்
பட்டுள்ளது. கைதான இருவரும் இந்தியர்கள என்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் இவர் களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.