சஞ்சய் அரோரா: சீன ராணுவம் ஊடுருவ முயற்சி செய்கிறது

புது­டெல்லி: இந்­திய எல்­லைக்­குள் சீன ராணு­வம் அவ்­வப்­போது அத்­து­மீறி நுழைய முயற்சி செய்­வது உண்­மை­தான் என்று இந்தோ-திபெத் எல்­லைப் படை (ஐடி­பிபி) இயக்­கு­நர் சஞ்­சய் அரோரா தெரி­வித்­துள்­ளார்.

நேற்று எல்­லைப் படை­யின் மிதி­வண்டி பேர­ணி­யைத் தொடக்கி வைத்த அவர், நாட்­டின் எல்­லை­யைப் பாது­காக்­கும் உன்­ன­தப் பணியை இந்தோ-திபெத் எல்­லைப் படை மேற்­கொண்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார்.

"எல்லை ஒரு­மைப்­பாட்டை நிர்­வ­கிக்­கும் பணி எங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. ஏற்­கெ­னவே பல­முறை எங்­கள் திற­மையை வெளிப்­ப­டுத்தி உள்­ளோம்.

"எல்­லைப் படை­யின் தயார் நிலை மன­நி­றைவை அளிக்­கிறது," என்­றார் சஞ்­சய் அரோரா.

கடந்த ஆகஸ்ட் மாதம் நூற்றுக்கும் மேற்பட்ட சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றதாக ஊடகங்களில் செய்தி வெளியானது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், சீனா ஊடுருவ முயற்சித்தது உண்மைதான் என்றார்.

"இந்தோ-திபெத் எல்லைப் படை நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் படை. எத்தகைய ஊடுருவலாக இருந்தாலும், அதைத் தடுத்து தகுந்த பதிலடியைக் கொடுத்து வருகிறோம். கடந்த கால சம்பவங்களை இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும்," என்றார் சஞ்சய் அரோரா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!