பெங்களூரு: சாய்ந்த கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது (காணொளி)

இந்தியாவின் கர்நாடக மாநிலம், பெங்களூரில் சாய்ந்த நிலையில் இருந்த கட்டடம் ஒன்றை அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர்.

மேற்கு பெங்களூரின் கமலா நகரில் உள்ள அந்த நான்கு மாடிக் கட்டடத்தில் இருந்த குடியிருப்பாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

கட்டடம் இடிக்கப்படுவதை முன்னிட்டு, தீயணைப்பாளர்களும் போலிசாரும் அந்தப் பகுதியில் பணியமர்த்தப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட அந்தக் கட்டடத்தில் இருந்த அனைவரும் சுற்றியுள்ள கட்டடங்களில் இருப்பவர்களும் வேறொரு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்.

பெங்களூரில் அண்மையில் பெய்த கனமழையும் அந்தக் கட்டடத்தின் அடித்தளம் வலுவாக இல்லாததும் அது சாய்ந்ததற்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டன.

Remote video URL

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!