அகமதாபாத்: குஜராத்தில் மோதிபுரா என்ற கிராமத்தில், மது குடித்துவிட்டு ஊருக்குள் நுழையக்கூடாது என்று புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதையும் மீறி மதுவருந்திவிட்டு ஊருக்குள் நுழைந்தால் அவர்களை இரும்புக்கூண்டுக்குள் அடைத்துவைக்கும் தண்டனையை ஊர் பஞ்சாயத்துத் தலைவர் அறிவித்தார்.
இரும்புக்கூண்டுக்குள் அடைபட்டுக்கிடக்கும் குடிமகன்கள், அபராதத்தொகையைக் கட்டியபின் விடுவிக்கப்படுவர்.
யாரும் மது குடிக்கக் கூடாது என்று அண்மையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அவர்கள் கட்டும் அபராதத் தொகை கிராம மேம்பாட்டுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்று கிராம பஞ்சாயத்துத் தலைவர் அறிவித்துள்ளார்.