ஷாருக்கான் பாஜகவில் இணைந்தால் போதைப்பொருள் சர்க்கரையாக மாறிவிடும்: அமைச்சர் கிண்டல்

மும்பை: நடி­கர் ஷாருக் கான் பாஜ­க­வில் இணைந்­து­விட்­டால் அவர் மகன் மீதான வழக்­கில் போதைப் பொருள் சர்க்­க­ரை­யாக மாறி­வி­டும் என்று மகா­ராஷ்­டிர அமைச்­சர் சஹா­ஜன் புஜ­பால் கிண்­ட­ல­டித்­துள்­ளார்.

இந்த வழக்கு வேண்­டு­மென்றே புனை­யப்­பட்­ட­து­போல் தெரி­கிறது என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

இதற்கு முன்பு இதே போன்று மற்­றொரு மகா­ராஷ்­டிரா அமைச்­ச­ரும் குற்­றம் சாட்­டி­யி­ருந்­தார்.

ஆர்­யன் கானை போதைப் பொருள் வழக்­கில் சிக்க வைக்க பாஜக சதித் திட்­டம் தீட்டி வரு­வ­தா­க­வும் அவர்­க­ளின் இலக்கு நடி­கர் ஷாருக்­கான்­தான் என­வும் மகா­ராஷ்­டிரா மாநில அமைச்­ச­ரான நவாப் மாலிக் கூறி­யி­ருந்­தார்.

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசுக் கப்பலில் போதை விருந்தில் பங்கேற்றதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டவர்களை கடந்த 3ஆம் தேதி போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.

ஆனால் இதுவரை தம்மிடமிருந்து போதைப்பொருள் கைப்பற்றப்பட வில்லை என்றும் வாட்ஸ்அப் உரை யாடல்களை போலிசார் தவறாக சித்திரிப்பதாகவும் தமது பிணை மனுவில் ஆர்யன் கான் தெரிவித்து உள்ளார்.

ஆர்யன் கானின் நீதிமன்ற காவல் வரும் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!