புதுடெல்லி: இந்தியாவில் நேற்று மாநிலங்கள் உருவான நாள் கொண்டாடப்பட்டது. இதையடுத்து கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநில மக்களுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்தியா சுதந்திரம் பெற்றதும் நாட்டின் பல பகுதிகள் மாகாணங்களாக இணைக்கப்பட்டு இருந்தன.
1956 நவம்பர் 1ஆம் தேதி அன்று சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் உருவாகின.
இதேபோல வட இந்தியாவில் மத்திய பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் ஒருங்கிணைந்த சமஸ்தானத்தில் இருந்து உதயமானது.
இதனால், நவம்பர் 1ஆம் தேதி மாநிலங்கள் உருவான நாளாக ஆண்டுதோறும் கடைப் பிடிக்கப்பட்டு அந்தந்த மாநில அரசு விழாவாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மாநில மக்களுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் டுவிட்டரில் வெளியிட்ட தகவலில், "மொழிவாரியாக மாநிலங்கள் உருவான நாளன்று ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், பஞ்சாப், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநில மக்களுக்கு எனது வாழ்த்துகள்," என்று அதிபர் ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டு உள்ளார்.
"இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வசிப்பவர் களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காகவும் வாழ்த்துகள்," என்றும் அவர் சொல்லியிருந்தார்.