தீபாவளியை முன்னிட்டு மனம் மயக்கும் ‘லேசர்’ காட்சி (காணொளியும் படங்களும்)

அயோத்தி: தீபாவளித் திருநாளை முன்னிட்டு, நேற்று முன்தினம் திங்கட்கிழமை தொடங்கிய ஐந்து நாள் ‘தீப உற்சவ’ விழாவால் களைகட்டி வருகிறது ராமபிரான் பிறந்த இடமான அயோத்தி. ஐந்தாவது ஆண்டாக இவ்விழா அங்கு இடம்பெறுகிறது.


இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ‘ராமர் பாதம்’ பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு, மனங்களைக் கொள்ளைகொண்ட ‘லேசர்’ காட்சி இடம்பெற்றது. நூற்றுக்கணக்கானோர் அதனைக் கண்டுகளித்தனர்.


தீபாவளியை ஒட்டி, இன்று புதன்கிழமை 12 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்படவுள்ளன. இது புதிய கின்னஸ் சாதனையாக அமையும்.


அவற்றில் 900,000 அகல் விளக்குகள் சராயு நதிக்கரையை அலங்கரிக்கும். எஞ்சிய 300,000 விளக்குகள் இன்று மாலை 6 மணியில் இருந்து 6.30 மணிவரை அயோத்தி நகரின் பல பகுதிகளில் ஏற்றப்படும்.


12,000 தொண்டூழியர்கள் அகல் விளக்கு ஏற்றும் பணிகளை மேற்கொள்வர்.


கடந்த ஆண்டு தீப உற்சவ விழாவின்போது 600,000 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு, உலக சாதனை படைக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!