மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பு; பாகிஸ்தான் கடற்படையினர் மீது வழக்குப்பதிவு இந்திய மீனவர் சுட்டுக்கொலை; அத்துமீறிய பாகிஸ்தான்

அக­ம­தாபாத்: குஜ­ராத் கடற்­பகுதி­யில் இந்­திய மீன­வர் ஒரு­வர் பாகிஸ்­தான் கடற்­ப­டை­யி­ன­ரால் சுட்­டுக்கொல்­லப்­பட்ட சம்­ப­வம் பதற்­றத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

தங்­கள் கடல் எல்­லைக்­குள் நுழைந்­த­தால் மீன­வர்­கள் மீது துப்­பாக்­கிச்சூடு நடத்­தப்­பட்­ட­தாக பாகிஸ்­தான் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

குஜ­ராத் மாநி­லம் போர்­பந்­தர் பகு­தி­யைச் சேர்ந்த ஏழு மீன­வர்­கள் கடந்த மாத இறு­தி­யில் மீன்­பி­டிக்க கட­லுக்­குள் சென்­ற­னர். கடந்த சனிக்­கி­ழமை மாலை ஜக்­காவ் கடற்­க­ரை­யில் மீன்­பிடித்­துக் கொண்­டி­ருந்­த­போது, திடீ­ரென இரண்டு சுற்­றுக்­கா­வல் பட­கில் பாகிஸ்­தான் கடற்­ப­டை­யினர் அங்கு வந்­த­னர்.

பாகிஸ்­தான் கடல் எல்­லைக்குள் அத்­து­மீறி நுழைந்­த­தாக குற்­றம்­சாட்­டிய கடற்­ப­டை­யி­னர், திடீ­ரென துப்­பாக்­கி­யால் சுடத்­தொடங்­கி­ய­தா­கத் தெரி­கிறது.

இதனால் பதறிப்போன மீனவர்கள் அங்கிருந்து வேகமாக கிளம்பியதுடன், கரையை நோக்கி படகைச் செலுத்தினர். ஆனால் அவர்­களை விடா­மல் துரத்­திய பாகிஸ்தான் கடற்­ப­டை­யி­னர், தொடர்ந்து துப்­பாக்­கி­யால் சுட்­ட­தில் ஒரு மீன­வர் குண்டு பாய்ந்து இறந்­தார். அவ­ரது பெயர் ஸ்ரீதர் ரமேஷ். 32 வய­தான அவ­ருக்கு ஆறு, எட்டு வய­தில் இரு பெண் குழந்­தை­கள் உள்ளனர்.

மேலும் ஒரு மீனவர் காயம் அடைந்துள்ளார். இந்­திய, பாகிஸ்­தான் கடல் எல்­லைப் பகு­தி­களில் இரு­நாட்டு மீன­வர்­களும் அவ்­வப்­போது எல்­லை­யைக் கடந்து மீன் பிடித்த குற்­றச்­சாட்­டின் பேரில் கைதா­வது வழக்­கம்­தான். எனி­னும் இவ்­வாறு படகை துரத்­திச் சென்று துப்­பாக்­கிச்சூடு நடத்­தப்­பட்­டது இந்­திய மீன­வர்­கள் மத்­தி­யில் கொந்­த­ளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக இரு பட­கு­க­ளில் வந்த அடை­யா­ளம் தெரி­யாத பாகிஸ்­தான் கடற்­படை வீரர்­கள் பத்துப் பேர் மீது கொலை, கொள்ளை முயற்சி உள்­ளிட்ட பிரிவு­க­ளின்­கீழ் போர்­பந்­தர் பகுதி போலி­சார் வழக்­குப்­ப­திவு செய்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே, பாகிஸ்­தான் கடற்­படை வெளி­யிட்ட அறிக்கை ஒன்­றில், இந்­திய மீன­வர்­கள் எல்லை கடந்து வந்து மீன்­பி­டிப்­பதைச் சுட்­டிக்­காட்டி, உட­ன­டி­யாக திரும்­பிச் செல்­லும்­படி எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­ட­தா­கக் குறிப்­பி­டப்­பட்டுள்­ளது.

அதைப் பொருட்படுத்தாத மீன­வர்­கள் தொடர்ந்து முன்­­னே­றிச் சென்­ற­தா­க­வும் அத­னால்­தான் துப்­பாக்­கிச்­சூடு நடத்­தப்­பட்­ட­தா­க­வும் அந்த அறிக்கை மேலும் தெரி­விக்­கிறது.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என மீன­வர்­க­ளி­டம் இந்­திய கடற்­படை உறுதி அளித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!