தொற்றுப் பரவல் சரிந்தாலும் பயம் குறையவில்லை

2 mins read
0c19df15-0428-407c-8e01-a350fd700058
-

புது­டெல்லி: ஏழு மாதங்­க­ளுக்கு முன்­னர் தின­மும் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் கொரோனா தொற்­றால் உயி­ரி­ழந்த நிலை­யி­லி­ருந்து இந்­தியா மீண்டு வந்­துள்­ள­தாக நியூ யார்க் டைம்ஸ் தெரி­வித்து உள்­ளது. இந்த நிலையை எட்ட, நாட்­டின் தலை­வர்­கள் தங்­க­ளது கொள்­கை­களில் மாற்­றம் செய்­த­தும் தடுப்­பூசி போடும் நட­வ­டிக்­கை­யை அர­சாங்­கம் வேகப்­ப­டுத்­தி­ய­தும் முக்­கிய கார­ணங்­கள் என்று அச்­செய்தி குறிப்­பிட்­டுள்­ளது.

இருந்­த­போ­தி­லும் கொள்­ளை­நோ­யால் வரக்­கூ­டிய ஆபத்து பற்றிய பயம் இன்­னும் நீங்­க­வில்லை என்று சுகா­தார நிபு­ணர்­கள் கூறி வரு­கின்­ற­னர். ஒரு பில்­லி­யன் தடுப்­பூசி என்­னும் நிலையை எட்­டிய பின்­னர் நாடு முழு­வ­தும் தடுப்­பூசி போடும் நட­வ­டிக்­கை­யில் சுணக்­கம் காணப்­

ப­டு­கிறது. விழாக்­கா­லங்­களில் கடைத் தொகுதி­க­ளி­லும் சந்­தை­க­ளி­லும் பெருங்­கூட்­டம் காணப்­பட்­டது. வீடு­க­ளுக்கு விருந்­தி­னர்­கள் கும்­பல் கும்­ப­லா­கச் செல்­கி­றார்­கள்.

பெரும்­பா­லா­னோர் முகக்­க­வ­சம் அணி­வ­தில்லை. டாக்­டர் நமஞ்­சயா கோப்­ரே­கேட் போன்ற தடுப்­பூசி பிர­சார தொண்­டூ­ழி­யர்­க­ளுக்­கான அவ­சி­யம் இனி தேவைப்­ப­டாது என்று அர­சாங்­கம் தெரி­விப்­ப­

தா­கத் தக­வல்­கள் கூறு­கின்­றன.

தற்­போதைய நிலைமை குறித்து, கிழக்கு மாநி­ல­மான ஜார்க்­கண்ட்­டைச் சேர்ந்த டாக்­டர் கோப்­ரே­கேட் கூறு­கை­யில், "கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தி­விட்டு சுதந்­தி­ர­மாக நட­மா­டு­வ­தற்­கான நேரம் இன்­னும் வர­வில்லை. ஏரா­ள­மான மக்­கள் முதல் தடுப்­பூசி மட்­டுமே போட்­டுள்­ள­னர். இதை இப்­ப­டியே விட்டு­ விட முடி­யாது. தடுப்­பூசி போடு­வதை மீண்­டும் தீவி­ரப்­ப­டுத்த வேண்­டும்," என்­றார்.

இதற்­கி­டையே, கொள்­ளை­

நோ­யி­லி­ருந்து மீள்­வோ­ரின் விகி­தம் 98.25 விழுக்­கா­டாக அதி­க­ரித்­துள்­ளது என்­றும் நோய்ப் பர­வல் தொடங்­கி­யது முதல் இது அதிக விகி­தம் என்­றும் ஏஎன்ஐ செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது. புதன்­கி­ழமை (நேற்று) காலை 9 மணி வரை­யி­லான 24 மணி நேரத்­தில் 11,466 பேருக்கு புதி­தாக தொற்று பாதிப்பு உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இது 264 நாள்­க­ளுக்­குப் பிறகு மிகக் குறை­வான எண்­ணிக்கை. 24 மணி நேரத்­தில் தொற்று பாதிப்­பால் 460 பேர் உயி­ரி­ழந்­த­னர்.