ராஜ்நாத் சிங்: எல்லை கடந்தும் தாக்குதல் நடத்தப்படும்

டேராடூன்: இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை ஆக்கிரமிக்க முயன்றால், தக்க பதிலடி தரப்படும் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், எல்லை கடந்து சென்று எதிரிகளைத் தாக்குவதற்கு இந்தியா தயங்காது என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

டேராடூனி்ல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதையே இந்தியா விரும்புகிறது என்றார்.

"இந்தியா எப்போதும் எந்த நாட்டையும் தாக்கியது இல்லை. அந்நிய மண்ணை நாம் ஆக்கிரமிப்பதும் இல்லை. ஆனால் சிலர் இதைப் புரிந்துகொள்வதில்லை.

"இது அவர்களது வழக்கமா அல்லது குணாதிசயமா என்று தெரியவில்லை," என்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.

பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் இந்தியாவைச் சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சி செய்வதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய அத்துமீறல்களுக்குப் பதிலடி தருவது மட்டுமல்லாமல், அந்நாட்டின் நிலப்பரப்புக்குள் சென்று வான்வழித் தாக்குதலை நடத்துவோம் என்றும் தெளிவான தகவல் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

அண்டை நாடான சீனாவும்கூட சில வி‌ஷயங்களைப் புரிந்துகொள்வதில்லை என்று குறிப்பிட்ட அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவின் ஓர் அங்குல நிலத்தைக் கூட எந்த நாட்டாலும் ஆக்கிரமிக்க முடியாது என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!