ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகர் காவல்துறை, இந்திய ராணுவம் இணைந்து நடத்திய வேட்டையில் லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைதான நபர் சங்கம் புத்காம் பகுதியைச் சேர்ந்த ஆர்ஷித் அகமது என்பது என தெரிய வந்துள்ளது. அவரிடம் இருந்து ஐந்து கைத் துப்பாக்கிகள், 5 தோட்டா உறைகள், 50 தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 2 கையெறி குண்டுகளும் கைப்பற்றப்பட்டுஉள்ளன. இதுதொடர்பாக ஷால்தெங் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புதிய உத்திகளில் 'ஹைபிரிட்' எனச் சொல்லப்படும் பயங்கர வாதிகள் பட்டியலில் இருப்பதில்லை. அவர்களை ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே தாக்குதல் நடத்த பயங்கரவாத குழுவினர் பயன்படுத்திக்கொள்கின்றனர். கடந்த 2021ஆம் ஆண்டில் காஷ்மீரில் பொதுமக்கள், காவ லர்கள், அரசியல் கட்சித் தொண்டர்கள், சிறுபான்மை சமூக மக்கள் என பலரை இலக்காகக் கொண்டு 20க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இந்தத் தாக்குதல்களில் 'ஹைபிரிட்' பயங்கரவாதிகளே ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த 'ஹைபிரிட்' பயங்கரவாதி களை அடையாளம் காண்பதும் பயங்கரவாத குழுவினர் அவர்களைப் பயன்படுத்துவதைத் தடுத்து நிறுத்துவதும் பெரும் சவாலாக இருப்பதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.