பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் தன் கணவன் என்பதை அறிந்து அதிர்ந்த மனைவி

பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் தன் கணவன் என்பதை அறிந்து அதிர்ந்த மனைவி

2 mins read
ce9557ae-a4f4-4118-b476-ba5fbb091e05
-

வதோ­த­ரா­: குஜராத் மாநிலத்தின் வதோதராவைச் சேர்ந்த 40 வய­துப் பெண், 2014ஆம் ஆண்டு தன்­னைத் திரு­ம­ணம் செய்­து­கொண்­ட­வர், ஆணாக மாறு­வ­தற்கு பாலின மாற்று அறு­வை சிகிச்சை செய்து­கொண்­டார் என்று கோத்ரி காவல்­நி­லை­யத்­தில் நேற்று முன்­தினம் புகார் அளித்­தார்.

முன்­ன­தாக விஜய்தா என்ற ஒரு பெண்­ணாக இருந்த டெல்­லி­யைச் சேர்ந்த டாக்­டர் விராஜ் வர்­த­னுக்கு எதி­ராக மோசடி மற்­றும் இயற்­கைக்கு மாறான உட­லு­றவு குறித்த புகாரை அவர் பதிவு செய்­தார், மேலும் டாக்­டர் வர்­த­னின் குடும்­பத்­தி­ன­ரும் உண்­மையை மறைத்து தனக்­குத் திரு­ம­ணம் செய்­து­வைத்­த­தாக அவ­ரது புகா­ரில் கூறி­யுள்­ளார்.

2011ஆம் ஆண்டு தனது முதல் கண­வனை இழந்த அந்­தப் பெண், குடும்­பத்­தி­ன­ரின் விருப்­பத்­திற்கு இணங்க வரன்­தே­டும் இணை­யத் தளம் மூலம் டாக்­டர் விராஜ் வர்தன் என்­ப­வ­ரைச் சந்­தித்­தார்.

இரு­வ­ரும் பேசிப்­ப­ழகி திரு­மணம் செய்­து­கொள்ள முடி­வெ­டுத்­த­னர். 2014ஆம் ஆண்டு பிப்­ர­வரி மாதம் சுற்­றம் சூழ திரு­ம­ணம் செய்து­கொண்­ட­னர்.

மணம் முடித்து ஏழு ஆண்­டு­கள் ஆகி­யும் இரு­வ­ருக்­கும் தாம்­பத்­திய உறவு என்­பது கொஞ்­ச­மும் இல்லை. கண­வனோ, "தான் ரஷ்­யா­வில் இருந்­த­போது ஒரு விபத்­துக்கு ஆளா­னேன். அதற்­குப் பிறகு என்­னால் தாம்­பத்­திய உற­வில் ஈடு­பட முடி­யாத நிலை ஏற்­பட்­டு­விட்­டது," என்­றும் சிறு அறு­வை சிகிச்சை மூலம் அதைச் சரி­செய்து­வி­ட­லாம் என்­றும் மனை­விக்கு ஆறு­தல் கூறி காலத்­தைக் கழித்து­வந்­தார். ஜன­வரி 2020இல், அவர் தனது எடை­யைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்ய விரும்பு­வதா­கக் கூறி கோல்­கத்தா சென்­றார்.

வர்­தன் மீது சந்­தே­கப்­பட்ட மனைவி வர்­த­னின் நட­வ­டிக்­கை­களை உன்­னிப்­பா­கக் கவ­னித்து வந்­தார். அப்­போ­து­தான் அவ­ருக்கு ஓர் அதிர்ச்­சி­யான உண்மை தெரி­ய­வந்­தது. தனது கண­வன் எடைக்­கு­றைப்பு அறு­வை சிகிச்­சைக்­காக கோல்­கத்தா செல்­ல­வில்லை. பாலின மாற்று அறு­வை சிகிச்சை செய்­து­கொள்­ளவே சென்­றுள்­ளார், அவர் முன்பு ஒரு பெண்ணாக இருந்தார் என்ற உண்­மை­யைத் தெரிந்துகொண்­டார். இதைத் தொடர்ந்து அந்தப் பெண் காவல் நிலை­யத்­தில் புகார் அளித்­தார்.