இந்தியாவின் ரிலயன்ஸ் நிறுவனம் 15,000 ரூபாய் (263 சிங்கப்பூர் வெள்ளி) செலவில் மடிகணினியை அறிமுகம் செய்யவிருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
மடிகணினியில் 4ஜி சிம் அட்டை பதிக்கப்பட்டிருக்கும் என்று அத்தகவல்கள் தெரிவித்தன.
ஜியோஃபோன் கைப்பேசியை அறிமுகம் செய்த ரிலயன்ஸ் அடுத்து குறைந்த விலை மடிகணினி சந்தையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
பிராசசர் எனப்படும் கைப்பேசி செயல்பாட்டு நுண்சில்லுகளை உற்பத்தி செய்யும் குவால்கோம் நிறுவனம், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆகியவற்றுடன் ரிலயன்ஸ் கைகோத்துள்ளது.
ஜியோபுக் என்று மடிகணினி பெயரிடப்படும் என்று கூறப்பட்டது.
அச்செய்தி பற்றி ரிலயன்ஸ் கருத்துரைக்கவில்லை என்று ராய்ட்டர்ஸ் கூறியது.