இணையத்தில் தகவல் திருட்டு: மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா

உலகம் முழுவதும் சுமார் 5 மில்லியன் பேரின் விவரங்கள் திருடப்பட்டு,  இணையத்தில் உள்ள ‘பாட்’ மென்பொருள் சந்தையில் விற்கப்பட்டுள்ளன.

அத்திருட்டில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்று இந்தியா.

சுமார் 600,000 இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக விபிஎன் சேவைகளை வழங்கும் நிறுவனமான நார்ட்விபிஎன் கூறியுள்ளது. 

'பாட்' எனப்படும் தானியங்கி மென்பொருள்கள், மனிதச் செயல்களை வேகமாக மேற்கொள்ளும் திறன் கொண்டவை.

அவற்றைக் கணினிகள், கைபேசிகளைத் தாக்கி தகவல்களைத் திருடும் தீங்கு விளைவிக்கும் மென்பொருளாக உருவாக்கலாம். 

திருடப்பட்ட விவரங்கள் இந்த பாட் சந்தைகளில் விற்கப்படுகின்றன.

கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து இத்தகைய விவரங்கள் விற்கப்பட்டு வருகின்றன. 

ஒருவரின் கணினி உள்நுழைவு விவரங்கள், இணையப்பக்க ‘குக்கீஸ்’,  செல்லும் இணையப்பக்கங்கள், ஸ்க்ரீன்ஷாட் எனும் கணினித் திரையின் புகைப்படம் போன்றவை விலைபோகின்றன.

அதுவும் வெறும்  490 ரூபாய் - அதாவது எட்டு சிங்கப்பூர் வெள்ளிக்கு. 

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக இணையப் பாதுகாப்பு மீறல்கள் நடந்து வருகின்றன.

கடந்த மாதம் எய்ட்ஸ் மருத்துவமனைகளின் கணினிக் கட்டமைப்பு ஊடுருவப்பட்டது அதற்கு எடுத்துக்காட்டு. 

இந்தியாவில் இவ்வாண்டுதான் இணையப் பாதுகாப்புச் சட்டங்கள் வலுவாக்கப்பட்டுள்ளன.  
 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!