இந்தியா

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த மூன்று மாதங்களில் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்த இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை 3.11 லட்சம் அதிகரித்து உள்ளது. சராசரி அடிப்படையில் இது இந்தியாவிலேயே அதிகம். இவர்கள் அனைவரும் முதன்முதலாக வாக்களிக்க உள்ளனர்.
புதுடெல்லி: ஜம்மு - காஷ்மீரில் சட்டம், ஒழுங்கு மேம்பட்டு வருவதால் சட்டம், ஒழுங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்திடம் ஒப்படைக்கப் போவதாகவும் பாதுகாப்புப் படைகளை மீட்டுக்கொள்ளப் போவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செவ்வாய்க்கிழமை ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
புதுடெல்லி:ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சட்டம், ஒழுங்கை கட்டிக்காக்கும் பொறுப்பை ஜம்மு - காஷ்மீர் காவல்துறையிடமே விட்டுவிட மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: அடுத்த பத்தாண்டுகளுக்குள் இந்தியா - மியன்மார் எல்லையில் 1,610 கிலோமீட்டர் (1,000 மைல்) நீளத்திற்கு வேலி அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநில விவசாயிகள் பயிரிட்டுள்ள பருத்தி, நெற்பயிர், பழங்கள், காய்கறிகளை குரங்குகள் கூட்டம் நாசப்படுத்தி வருவதால் மக்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.