மலேசிய, சிங்கப்பூர்க் கலைஞர்கள் சங்கமித்த தீபாவளிக் கலைவிழா

2 mins read
2ddb12e4-49d6-41c1-bf42-cebc8f351dfe
தீபாவளிக் கலைவிழாவின் ஏற்பாட்டுக் குழுவினரும் கலைஞர்களும். - படம்: ரவி சிங்காரம்
multi-img1 of 3

மலேசிய, சிங்கப்பூர்ப் பாடகர்கள் இணைந்து வழங்கிய இசைவிருந்து, இளங்கோவனின் படைப்பாற்றல், முஸ்தஃபாவின் நகைச்சுவை, ரஜினி சுரே‌‌ஷ் - வாணிஸ்ரீ நடனம், அறுசுவை உணவு போன்றவற்றுடன் இனிதாக நடைபெற்றது கேலாங் சிராய் சமூக மன்றத்தின் தீபாவளிக் கலைவிழா.

சனிக்கிழமை (நவம்பர் 22) நடந்த நிகழ்ச்சியை கேலாங் சிராய் இந்தியர் நற்பணிச் செயற்குழு (ஐஏஇசி), பெண்கள் செயற்குழு, ‘ஐஎன்சி’ ஆகியவை யூனோஸ் வில்லேஜ், டாய் கெங் கார்டன்ஸ், கேலாங், ஹேக் ரோடு - தஞ்சோங் காத்தோங் குடியிருப்பாளர் குழுக்களுடன் இணைந்து ஏற்பாடுசெய்தன.

மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதி அடித்தள ஆலோசகராக முதன்முறையாகத் தீபாவளிக் கலைவிழாவில் கலந்துகொண்டார் திருவாட்டி டயானா பாங்.

“எஸ்ஜி60ஐக் கொண்டாடும் தருணத்தில், வலுவான, நல்லிணக்கமிக்க பல்லினச் சமூகத்தை உருவாக்கியதில் நம் நாடு அடைந்துள்ள வெற்றியைக் கொண்டாடும் விதமாக இக்கொண்டாட்டம் அமைகிறது,” என்றார் கேலாங் சிராய் இந்தியர் நற்பணிச் செயற்குழுத் துணைத் தலைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான முஹம்மது மாலிக்.

அறுசுவைப் பலகாரங்கள், இரவு உணவுடன் தீபாவளிக் கலைவிழா நடந்தேறியது.
அறுசுவைப் பலகாரங்கள், இரவு உணவுடன் தீபாவளிக் கலைவிழா நடந்தேறியது. - படம்: ரவி சிங்காரம்

“தீபாவளி என்பது, ஒரு சிறு ஒளியால் ஆழ்ந்த இருளை விலக்கமுடியும் என்பதை நினைவூட்டுகிறது. நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரது வாழ்விலும் ஒளியாக இருக்கவேண்டும்,” என்றார் திருவாட்டி டயானா.

“நான் 40 ஆண்டுகளாக ரஜினிபோல் வேடமிட்டு, அவரது பாடல் காட்சிகளை நடித்துவருகிறேன். சிங்கப்பூர் ரசிகர்கள் ரஜினியை எப்படி ரசிக்கிறார்களோ அதேபோல் என்னைப் போன்ற கலைஞர்களையும் ரசிக்கிறார்கள்,” என்றார் மலேசியாவைச் சார்ந்த ரஜினி சுரே‌ஷ்.

கேலாங் செராயில் நான் பாடியது இதுவே முதல் முறை. மலாய், சீன, தமிழ் மக்கள் பலரும் வந்திருந்தனர். அவர்கள் முன்னிலையில் பாடியது நன்றாக இருந்தது,” என்றார் 20 ஆண்டுகளாகப் பாடிவரும் சிங்கப்பூர்ப் பாடகர் ரமே‌ஷ். அவருடன் சேர்ந்து பாடினார் சிங்கப்பூர்ப் பாடகி மலர்விழி.

சிங்கப்பூர்ப் பாடகர்கள் ரமே‌ஷ், மலர்விழி.
சிங்கப்பூர்ப் பாடகர்கள் ரமே‌ஷ், மலர்விழி. - படம்: ரவி சிங்காரம்
அதிர்‌ஷ்டக் குலுக்கல் வெற்றியாளருடன் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா பாங் (வலமிருந்து இரண்டாமவர்), கேலாங் சிராய் இந்திய நற்பணிச் செயற்குழுத் தலைவர் தாஜுதீன் (இடமிருந்து இரண்டாமவர்), படைப்பாளர் இளங்கோவன் (இடக்கோடி).
அதிர்‌ஷ்டக் குலுக்கல் வெற்றியாளருடன் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா பாங் (வலமிருந்து இரண்டாமவர்), கேலாங் சிராய் இந்திய நற்பணிச் செயற்குழுத் தலைவர் தாஜுதீன் (இடமிருந்து இரண்டாமவர்), படைப்பாளர் இளங்கோவன் (இடக்கோடி). - படம்: ரவி சிங்காரம்

சரிகமப பருவம் 4ல் போட்டியிட்டு இறுதிச் சுற்றுகள்வரை முன்னேறிய அருளினி ஆறுமுகம், ‘இசை யுத்தம்’ போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற சக்தி பிரியா இளங்கோவன், ‘தணேஸ் அண்ட் பேண்ட்’ இசைக்குழுவை நடத்தும் தணேஸ் போன்ற மலேசியக் கலைஞர்களும் இன்னிசைப் பாடல்கள் பாடினர்.

ஏழு வயதில்தான் பேசத் தொடங்கிய அருளினிக்கு இசைதான் பேராதரவாக இருந்தது. அவருக்கு ‘ஆட்டிசம்’ குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். இசையுலகுக்கு அப்பால், ‘சாட்சி’ எனும் தொலைக்காட்சித் தொடர் மூலம் அண்மையில் நடிப்பிலும் இவர் கால்பதித்துள்ளார்.

மலேசியப் பாடகர்கள் அருளினி, தணேஸ்.
மலேசியப் பாடகர்கள் அருளினி, தணேஸ். - படம்: ரவி சிங்காரம்

“இந்தப் பயணத்தில் தொடர்ந்து பிறருக்கு முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன். என்னைப் போன்றோர் எந்நாட்டிலிருந்து வந்தாலும், அவரவர் நாட்டைப் பிரதிநிதிக்கவேண்டும் என்பதே என் ஆசை,” என்றார் அருளினி.

மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்டோரிடம் கனிவன்புடன் நடந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டார் அருளினி. இவர் சிங்கப்பூருக்கு வந்துள்ளது இது முதன்முறையன்று. மெர்லையனைக் காண்பதும் வாத்துச் சோறு (Duck rice) உண்பதும் தமது விருப்பங்கள் என்கிறார் இவர்.

பல்லினத்தாரின் ஆடல், பாடல் கொண்டாட்டத்துடன் சிறப்பாக நடந்த தீபாவளிக் கலைவிழா.
பல்லினத்தாரின் ஆடல், பாடல் கொண்டாட்டத்துடன் சிறப்பாக நடந்த தீபாவளிக் கலைவிழா. - படம்: ரவி சிங்காரம்
நிகழ்ச்சியில் சிறப்பாக உடை உடுத்திய வெற்றியாளருக்குப் பரிசு வழங்குகிறார் கேலாங் சிராய் ஐஏஇசி துணைத் தலைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான முஹம்மது மாலிக் (நடுவில்).
நிகழ்ச்சியில் சிறப்பாக உடை உடுத்திய வெற்றியாளருக்குப் பரிசு வழங்குகிறார் கேலாங் சிராய் ஐஏஇசி துணைத் தலைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான முஹம்மது மாலிக் (நடுவில்). - படம்: ரவி சிங்காரம்

“நான் ஏழு வயதிலிருந்து பாடுகிறேன். என் பெற்றோரும் பாடுவர். 90களில் ‘புதிய ராகம்’ எனும் புகழ்பெற்ற இசைக்குழுவில் என் தந்தை பாடினார்,” என்றார் ‘சந்திரலேகா’ பாடலைப் பாடிய சக்தி பிரியா இளங்கோவன்.

சக்தி பிரியா இளங்கோவன்.
சக்தி பிரியா இளங்கோவன். - படம்: ரவி சிங்காரம்
மலேசியாவைச் சேர்ந்த ரஜினி சுரே‌ஷ், சிங்கப்பூரைச் சேர்ந்த வாணி‌ஸ்ரீ ஆதிசிவம் இணைந்து படைத்த இரு நடன அங்கங்கள், பார்வையாளர்களைப் பரவசப்படுத்தின.
மலேசியாவைச் சேர்ந்த ரஜினி சுரே‌ஷ், சிங்கப்பூரைச் சேர்ந்த வாணி‌ஸ்ரீ ஆதிசிவம் இணைந்து படைத்த இரு நடன அங்கங்கள், பார்வையாளர்களைப் பரவசப்படுத்தின. - படம்: ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்