காற்றுத் தூய்மைக்கேட்டினால் சருமப் பிரச்சினை போன்றவை ஏற்படுவது எல்லோரும் அறிந்ததே. இந்நிலையில், தூய்மையற்ற காற்றுச் சூழலில் நாம் இருப்பது அதிகமாகும் போது உடல் எடை அதிகரிக்கும் வாய்பும் அதிகரிக் கிறது என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. உடல் எடை கூடுவதால் ரத்தக் கொதிப்பு, இதயநோய் போன்ற வையும் ஏற்படுகின்றன. ஆய்வாளர்கள் எலிகளையும் எலிக்குட்டிகளையும் இரண்டு கூண்டுகளில் அடைத்து வைத்தனர். அவற்றுள் ஒன்று திறந்த வெளியில் மாசுபட்ட காற்றில் வைக்கப்பட்டது. மற்றொன்றை தூய்மைப் படுத்தப்பட்ட காற்று இருக்கும் இடத்தில் வைத்தனர்.
19 நாட்கள் சென்றதும் தூய்மையற்ற காற்றுவெளியில் இருந்த எலிகளின் நுரையீரலும் கல்லீரலும் எடை அதிகரித்து இருந்தது டன் அவற்றுக்கு தசை அழற்சியும் கூடியிருந்தது. காற்றுத் தூய்மைக் கேடு சுவாச உறுப்புகளுக்கு மட்டும் ஊறு விளைவிக்கவில்லை. காற்றுத் தூய்மைக் கேடு அந்த எலிகளின் உடலில் உள்ள இன்சுலின் எதிர்ப்பையும் அதிகரித்தது. இது 'டைப் 2' நீரிழிவு நோக்கு இசைவானதாக இருக்கிறது. எட்டு வாரங்களுக்குப் பிறகு தூய்மையற்ற காற்றில் இருந்த பெண், ஆண் எலிகளின் எடை முறையே 10%, 18% அதிகரித்து இருந்தது. காற்றுத் தூய்மைக் கேட்டினால் அதிகரிக்கும் உடற் பருமன் குறித்து சர் கங்கா ராம் மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் எஸ்.பி. பியோத்ரா கூறுகையில், "நகரங்களில் மக்க எதிர்நோக்கும் காற்றுத் தூய்மைக் கேட்டின் அளவைப் பார்க்கையில் நோய்களைத் தடுக்க 'ஏர் ப்யூரி ஃபைர்'களைப் பயன்படுத்து வதைத் தவிர வேறு வழியில்லை," என்று கூறினார்.
பொதுவாகவே காற்றுத் தூய்மைக்கேடு நமது உடலின் மூச்சுக் காற்றான பிராண வாயு மூளைக்கு அதிகம் தேவை. கரியமில வாயு மற்றும் மாசுபட்ட காற்றை நாம் அதிகம் சுவாசிக்கும் நிலை ஏற்பட்டால் மூளைக்குச் செல்லவேண்டிய பிராண வாயுவும் குறைகிறது. இதனால் மூளையின் செயல் திறன் குறைகிறது என்கின்றனர் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள்.