தங்கமீன் வாசகர் வட்ட ஏற்பாட்டில் 'மலேசிய எழுத்தாளர்களோடு ஒரு கோப்பைத் தேநீர்' என்ற இலக்கியக் கலந்துரையாடல் கடந்த சனிக்கிழமை மாலை அங் மோ கியோ பொது நூலகத்தில் நடைபெற்றது. மலேசிய எழுத்தாளர் கோ. புண்ணியவானும் மலேசியாவின் 'தென்றல்' வார இதழின் ஆசிரியர் வித்யாசாகரும் வாசகர்களோடு கலந்துரையாடினார்கள். மலேசிய இந்தியர்களைப் பற்றி, 'இவன் நட்ட மரங்களெல்லாம் நிமிர்ந்து விட்டன; இவன் நடும்போது குனிந்தவன்தான்; இன்னும் நிமிரவில்லை' என்ற புகழ்பெற்ற கவிதையை எழுதிய கோ. புண்ணியவான் தமது அறிமுக உரையில், தொண்ணூறுகள் வரையிலான சீரான மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சியையும் அதற்குப்பின் ஏற்பட்ட தேக்க நிலையையும் பற்றிப் பகிர்ந்து கொண்டார்.
'தென்றல்' வார இதழின் ஆசிரியர் வித்யாசாகர், மலேசிய இளையர்களிடையே தமிழ் வாசிப்பு குறைந்து வருவதாகக் கூறினார். எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு, தமிழ் இலக்கியங்களை, புத்தகங்களை வாசிப்பவர்களின் எண் ணிக்கை குறைந்து வருவதே காரணம் என்றார். இன்றைய தலைமுறை நீண்ட கதைகள், நாவல்கள் போன்றவற்றைப் படிப்பதற்குத் தயாராக இல்லை. மாறாக, சிறு சிறு துணுக்குகளையே வாசிக்க முற்படுகின்றனர் என்ற கவலையை வெளிப்படுத்தினார்.
'ஒரு கோப்பைத் தேநீர்' நிகழ்ச்சியில் பங்கேற்ற கோ.புண் ணியவான் (இடது), வித்யாசாகர் (வலது). படம்: தங்கமீன் வாசகர் வட்டம்