கேரளாவில் உள்ள சக்குளத்துக்காவு ஸ்ரீ பகவதி அம்மனின் உற்சவர் சிலை இம்மாதம் 22ஆம் தேதியன்று சிங்கப்பூருக்குக் கொண்டுவரப்பட்டது. அன்று முதல் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. பெருமாள் கோயில் வளாகத்தில் நடைபெறும் ஐந்து நாள் பூஜைகளில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நூற்றுக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று வந்திருக்கிறார்கள் என்றும் நேற்று நடைபெற்ற 'பொங்கலா' எனும் கூட்டுப் பொங்கல் வழிபாட்டில் மட்டும் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 600க்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றார்கள் என்றும் தமிழ் முரசிடம் கூறினார்
சிங்கப்பூர் மலையாளி இந்து சமாஜத்தின் தலைவர் திரு அஜய் குமார் நாயர். நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற 'பொங்கலா' எனும் கூட்டுப் பொங்கல் வழிபாட்டில் 600க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றார்கள். படம்: சிங்கப்பூர் மலையாளி இந்து சமாஜம்