முனைவர் இராஜிக்கண்ணுவின் 'சிங்கப்பூரில் தமிழ்க்கல்வி - வரலாற்று நோக்கில் (1950 - 2009)' என்னும் நூல் வெளியீட்டு விழா இம்மாதம் 7ஆம் தேதி சையது ஆல்வி சாலையில் உள்ள ஆனந்த பவன் உணவகத்தின் மேல் தளத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினரான உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய இயக்குநர் இரா. அன்பரசு நூல் வெளியீட்டினைக் காணொளி வாயிலாகத் தொடங்கி வைத்தார். தலைமையுரை ஆற்றிய 'சிம்' பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க. சண்முகம், உள்ளூர்ப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தேசியக் கல்விக் கழகத் தமிழ்த்துறையைச் சேர்ந்த முனைவர் சீதாலட்சுமி நூல் ஆய்வினை மேற்கொண்டார். நூல் ஆசிரியரின் கடின உழைப்பினைத் தம் உரையில் பாராட்டினார். நூலினை வாங்க விழைவோர் 98007979 என்னும் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய இயக்குநர் இரா. அன்பரசுவிடம் இருந்து தேசிய நூலக வாரிய அதிகாரி புஷ்பலதா கதிரவேலு (இடது) நூலைப் பெற்றுக் கொண்டார். உடன் முனைவர் இராஜிக்கண்ணு.