முதல் முதலாக வெளியிட்ட இரு நூல்களுமே சிங்கப்பூர் இலக்கியப் பரிசை வென்றது எழுத் தாளர் சித்துராஜ் பொன்ராஜுக்கு மகிழ்ச்சியுடன், ஆர்வத்தையும் பயத்தையும் தந்துள்ளது. "இந்தப் பரிசு ஒரு வாசல். தெரியாத இடத்துக்கு ஒரு வாசல் திறக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. அதேநேரத்தில் அந்த வாசலுக்குள் என்ன இருக்கும் என்ற ஆர்வமும் பயமும் அக்கறை யும் சரியாக பயணம் செய்ய வேண் டுமே என்ற கவனமும் ஏற்படுகின் றன," என்றார் திரு சித்துராஜ்.
இவரது 'மாறிலிகள்' சிறு கதைத் தொகுப்பு புதினம் தமிழ் பிரிவில் $10,000 பரிசை வென்றது. 'காற்றாய் கடந்தாய்' கவிதைத் தொகுப்பு கவிதைப் பிரிவில் தகுதிப் பரிசை வென்றது. "40 வயது இளையர் இரு பரிசுகளை வாங்கியது மகிழ்ச்சியாக இருக்கிறது," என்ற மற்றொரு விருதாளரான அ.கி.வரதராசன், "பெரிய தொகையைப் பரிசாகக் கொடுக்கிறார்கள். இது பலரை எழுத ஊக்குவிக்கும்," என்றார்.
சிங்கப்பூரில் தமிழ் இலக்கியத் துக்கு வழங்கப்படும் வாய்ப்புகளும் ஆதரவும் தொடர்ந்து எழுதும் ஆர்வத்தை வளர்ப்பதாகக் குறிப்பிட்டார் இந்த ஆண்டு இரு பரிசுகளை வென்ற மற்றொரு படைப்பாளரான அ.கி.வரதராசன். கவிதை பிரிவில் தகுதிப் பரிசை வென்ற 'சிங்கப்பூர் நான்மணி மாலை' சிங்கப்பூரின் பெருமைகளைப் பேசும் நோக்கில் ஆர்வத்தோடு இவர் எழுதிய நூல். சிங்கைத் தாய்க்கு நிறைய பூக்களைச் சூடுவதுபோல் வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரியப்பா, அகவல்பா என நிறைய பா வகைகளைக் கொண்டு இந்நூலை அவர் இயற்றியுள்ளார்.
புதினம் அல்லாதவைக்கான தமிழ்ப் பிரிவில் பாராட்டுப் பரிசை வென்ற இவரின் 'கம்பன் காட்டும் கணைகள்' சென்னைக் கம்பன் கழகத்தின் இந்த ஆண்டுக்கான ஆ.ச.ஞானசம்பந்தன் நினைவுப் பரிசையும் வென்றுள்ளது.
பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் களும் சிங்கப்பூரில் இலக்கிய வட்டமும் தமது இலக்கிய ஆர்வத்தை வளர்த்து ஆழப்படுத்தியதாகக் கூறிய இவர், சிங்கப்பூரில் பல இலக்கியக் குழுக்கள் வெவ்வேறு தளங்களில் இயங்குவதை ஆக்ககரமானதாகப் பார்க்கிறார். சிறு சிறு குழுக்களின் சுயவெளிப்பாடு இலக்கியத்தில் தனித்துவத்தையும் பன்முகத்தன்மையையும் வளர்க்கி றது என்றார் அவர். அனுபவமிக்க மூத்த வானொலிப் படைப்பாளர்களில் ஒருவரான திரு செ.ப. பன்னீர்செல்வம், வெளிவந்த நூல் களுக்கு வழங்கப்படும் இலக்கியப் பரிசு பரந்துபட்ட படைப்பாக்கத்தை வளர்ப்பதாகத் தெரிவித்தார். சிங்கப்பூரின் தமிழ் முன்னோடிகள் குறித்து அடுத்த தலைமுறை யினர் தெரிந்துகொள்வது முக்கியம் என்ற நோக்கில் இவர் எழுதிய 'சிங்கப்பூர் தமிழ் முன்னோடிகள்' சிங்கப்பூர் இலக்கியப் பரிசில் புதினம் அல்லாத பிரிவில் (தமிழ்) பாராட்டுப் பரிசு பெற்ற நான்கு நூல்களில் ஒன்று.
விருதுகளை வென்ற படைப்பாளர்கள் (இடமிருந்து வலம்) ஷாநவாஸ், செ.ப. பன்னீர்செல்வம், அ.கி.வரதராசன், கோட்டி திருமுருகானந்தம். வலது படம் - சித்துராஜ் பொன்ராஜ். படங்கள்: கோ பெங் சை