சென்னையிலுள்ள கொரிய குடியரசின் முதன்மை தூதர் திரு.யூம் சூ கிம் அவர்கள் தமிழகத்திற்கும் கொரியாவுக்கும் மொழி, கலாசார தொடர்புகள் இருப்பதைத் தன் ஆராய்ச்சியின் வாயிலாக சுட்டிக்காட்டியுள்ளார். இதுபற்றி விரைவில் நடைபெற வுள்ள 'மெட்ராஸ் வீக்' என்ற நிகழ்ச்சியில் பகிர்ந்துகொள்ள வுள்ளார். ஏறத்தாழ நாலாயிரம் கொரிய சொற்கள் தமிழ்ச் சொற்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாக அவர் கூறினார். வணக்கம், நாள், மனைவி, அவதிப்படு போன்ற தமிழ்ச் சொற்கள் கொரிய மொழியிலும் பயன்படுத்தப்படுகின்றன.
தமிழர்களைப்போல் கொரியர்களும் காலணிகளை வீட்டிற்கு வெளியேவிட்டுச் செல்லும் பழக்கம் உள்ளவர்கள் என்றும் அவர் கூறுகிறார். கொரியாவின் முதல் அரசி இந்தியாவிலிருந்து அதிலும் தமிழ்நாட்டிலிருந்து சென்றவள் என்று சொல்லப்படுவதாகக் கூறி னார். அப்போது அவர் இங்கிருந்து கல் ஒன்றைக் கொண்டு சென்றதாகச் சொல்லப்படுகிறது. அது இங்குள்ள 'இளவட்டக்கல்' போன்றது எனக் கூறப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். கொரிய தூதர் முதன்முதலாகத் தமிழகப் பெண்களைப் பார்த்தபோது முற்காலத்து கொரிய பெண்களைப் பார்ப்பது போல உணர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். கொரியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பண்பாடு, வரலாறு, மொழி, தொழில் தொடர்புகளைப் பெருக்குவதில் தாம் ஆதரவு காட்டுவதாக அவர் கூறினார்.