தேசிய கவிதை விழாவின் தமிழ் நிகழ்ச்சிகள் ஜூலை 31ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரையில் லசால் கலைக் கல்லூரியில் (Creative Cube) நடைபெறும். 'சிங்கப்பூரின் கவிதைச் சாலை' என்ற தலைப்பில் இசை, நடனம், கவிதைப் படைப்புடன் நிகழ்ச்சி தொடங்கும். தொடர்ந்து ஆங்கிலம், தமிழ், சீனம், மலாய் மொழிகளில் 'இன்று கவிதை' பற்றிய உரைகள் இடம்பெறும். கவிதையை வாசித்து உணர்ந்து அனுபவிப்பது குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் உரை ஆற்றுவார்.
அடுத்து, வெற்றி பெற்ற கவிதைகள் பற்றிய உரையாடல், கவியரங்கம் இடம்பெறும். கவிதை வாசிப்பு, நூல் அறி முகங்களுடன் கவிதை விழாவின் நிறைவு விழா ஞாயிறுக்கிழமை மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை லசால் கலைக் கல்லூரியில் நடைபெறும். இதில் கவிதை நூல்களை வெளியிட விரும்புபவர்கள் தேசிய கவிதை விழா அமைப்பைத் தொடர்புகொள்ளலாம். சிங்கப்பூரின் தேசிய மொழிக் கவிதைகளை மக்களிடம் பிரபலமாக்குவதுடன் நான்கு மொழி கவிஞர்களுக்கிடையேயான அறிமுகத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் நடைபெறும் கவிதை விழா நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் அனுமதி இலவசம். எனினும் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளவேண்டும்.