விற்பனைத் திருவிழாவில் மக்கள் வெள்ளம்

'சிங்கப்பூர் அனைத்துலக இந்தியக் கண்காட்சி' (SIIE) விற்பனைத் திருவிழாவுவிற்குக் கடந்த நான்கு ஆண்டுகளாக வருகை புரிந்த திருமதி யின் சியுவ் சூ, சன்டெக் மாநாட்டு, கண்காட்சி மையத்தில் நேற்று முன்தினம் அதிகாரபூர்வ மாகத் தொடங்கிய விற்பனைத் திருவிழாவிற்கு முதல் நாளன்றே தன்னுடைய அக்காவின் புதல்வி யுடன் வந்துவிட்டார்.

"இந்த விற்பனைத் திருவிழா நான் நாட்காட்டியில் குறித்து வைத் துள்ள முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்று. விளம்பரத்தில் குறிப்பிட்டு இருந்ததைப் போல் இந்தியச் சூழல் நம் அருகில் இருப்பது போன்ற ஒரு உணர்வு இங்கு கிடைக்கிறது," என்றார் 68 வயது திருமதி யின். "நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன் இந்த விற்பனைத் திருவிழா 'எக்ஸ்போ'வில் நடந்தது. இப் போது என் இல்லத்திற்கு அருகில் 'சன்டெக்'கில் நடைபெறுவதால் மிகவும் வசதியாக உள்ளது," என் றார் 'சிட்டி ஸ்குவேர் ரெசிடன்சஸ்' கூட்டுரிமை வீட்டில் வசிக்கும் இவர். எஃகினால் (ஸ்டீல்) உருவாக் கப்பட்டு கற்களால் அலங்கரிக்கப் பட்ட கைப்பை, மேற்சட்டைகள், காற்சட்டைகள், தோரணங்கள் என கிட்டத்தட்ட $200 மதிப்பி லான பொருட்களைத் தான் வாங் கியதாக இவர் கூறினார்.

சிங்கப்பூர் அனைத்துலக
இந்தியக் கண்காட்சி

எங்கே: சன்டெக் சிட்டி மாநாட்டு மைய
கண்காட்சிக் கூடங்கள் 401, 402
எப்போது: செப்டம்பர் 22ஆம் தேதி முதல்
25ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல்
இரவு 10 மணி வரை

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!