சிங்கப்பூர் சிறுவர்கள் அதிகம் இனிப்பு கலந்த உணவுப் பொருட்களைச் சாப்பிடுவதாகப் பொதுவான கருத்து நிலவுகிறது. இனிப்பு சேர்க்கப்பட்ட பழச்சாறுகள், சுவையூட்டப்பட்ட பால், கேக் போன்றவற்றை அவர்கள் அதிகம் சாப்பிடுகின்றனர். சிங்கப்பூரில் உள்ள பாலர் பள்ளிகளில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது, 427 பள்ளிகளில் மட்டுமே மூன்று முதல் ஆறு வயது வரையிலான சிறுவருக்கு அரசாங்க வழிகாட்டி குறிப்பிடும் ஆரோக்கியமான உணவு வழங்கப்படுவது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நடத்திய சோதனைகளில் தெரிய வந்துள்ளது.
இனிப்பு நிறைந்த உணவுப் பொருட்களை அவர்கள் உட்கொள்வதற்கும் வளர்ந்த பிறகு அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கும் தொடர்பிருக்கலாம் என சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் சா சுவீ ஹாக் பொது சுகாதாரப் பள்ளியின் தலைவர் சியா கீ செங் அக்கறை தெரிவித் துள்ளார். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகம் நீரிழிவு தொடர்பான 11 ஆய்வுகளுக்கு $1 மில்லியன் வெள்ளியை ஒதுக்கியுள்ளதாக திரு சியா கூறியுள்ளார். ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர்களின் உண வுப் பழக்கங்கள், அவர்களது உடற்பருமன், சுகாதாரம் பற்றி அந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். சிங்கப்பூர் அனைத்துலக பொதுச் சுகாதாரக் கருத்தரங்கில் 25 நாடுகளைச் சேர்ந்த சுமார் 600 ஆய்வாளர்களிடையே இந்தத் தகவல் பகிர்ந்துகொள்ளப்பட்டது.
அங் மோ கியோவில் இருக்கும் 'கார்ப்பி டியம் @ ஐடிஇ' பாலர் பள்ளியில் 'கே2' பயிலும் மாணவர்களுக்கு உணவளித்து உரையாடும் நிலைய மேலாளர் லோர்பெர்ட் டே (இடது).