சீன நிறுவனம் ஒன்று தன்னுடைய ஊழியர்கள் ஐபோன் வாங்குவதற்குத் தடை விதித்துள்ளது. நன்யாங் யோங்காங் என்ற அந்த மருத்துவ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தடையை மீறி ஐபோன் 7 வாங்கும் ஊழியர் கள் வேலையை விட்டுச் செல்ல வேண்டியதுதான் என்று கூறப் பட்டுள்ளது. இந்நிறுவனம் மட்டுமல்லாமல், மேலும் சில சீன நிறுவனங்களும் தங்களது ஊழியர்கள் ஐபோன் 7 பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளதாக பிபிசி செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இதற்கு அவர்களின் தேசப்பற்றும் தங்களது ஊழியர்கள் உயிரற்ற பொருட்களைச் சார்ந்து வாழ்வதைத் தவிர்ப்பதும்தான் நோக்கம் என்றும் கூறப்படுவதாக அந்த செய்திக் குறிப்பு தெரிவிக் கிறது. நன்யாங் யோங்காங் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் உள்ளூர் செய்தி இணையத்தளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "தங்களது ஊழியர்கள் அவர் களது குடும்பத்தோடு அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்ற நோக்கமே இதற்கு காரணம்," என்று கூறினார்.
இதுபோல் ஐபோன் 7 வாங்க தடை விதித்துள்ள சீன மருத்துவமனை ஒன்று, தடையை மீறும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது என்று கூறியுள்ளது. "நான் வெளிநாட்டு பொருட்க ளுக்கு எதிரானவன் அல்ல. எனது ஊழியர்கள் தங்களது வசதிக்கு அப்பாற்பட்டு, விலையுர்ந்த ஐபோன் வாங்குவது பிடிக்க வில்லை. "ஏனென்றால், சிலர் அதற்காக கடன் வாங்குகின்றனர். பின்னர் கடனை அடைக்க மிகவும் சிரமப் படுகின்றனர். "இதையெல்லம் தாண்டி ஒரு சிலர் ஐபோன் வாங்குவதற்காக தங்களது உடல் உறுப்புகளைகூட விற்றுவிடுகின்றனர்," என்று அம்மருத்துவமனையின் நிர்வாகி பிபிசிக்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். 2016ஆம் ஆண்டின் இரண் டாம் காலாண்டில், சீனாவில் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குச் சந்தை 12 விழுக்காட்டில் இருந்து 9 விழுக்காடாக சரிந்துள்ளது. இதன் காரணமாக சீனாவில் 'ஹுவேய், 'ஒப்போ', 'விவோ', 'சையோமி' ஆகிய திறன்பேசி தயாரிப்பு நிறுவனங்கள் முதல் நான்கு நிலையில் இருக்க, ஆப்பிள் நிறுவனம் ஐந்தாவது இடத்தையே பிடித்துள்ளது.
People walk past stores promoting the Apple iPhone 6S in the southern Chinese city of Shenzhen.PHOTO: REUTERS