சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டுதோறும் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழா வில் அவரது பெயரில் விருது வழங்கி வருகிறது. கண்ண தாசன் ஒரு கவிஞர்; சிறுகதை, நாவல், கட்டுரை, நாடக எழுத் தாளர்; திரைக்கதை வசனம் எழுதியவர்; பாடலாசிரியர் எனப் பலத்திறன் படைத்தவர்; அந்தத் துறைகளிலே முத்திரை பதித்த வர். அதனால் மேற்குறிப்பிட்ட துறைகளில் குறைந்தது ஏதாவது ஒன்றில் சிறந்த திறன்காட்டி வரும் ஒருவர் ஆண்டுதோறும் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது.
பரிந்துரைக்கப்படுபவர்கள், பரிந்துரை செய்பவர் ஆகியோரின் பெயர், முகவரி, தொடர்பு எண்கள், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன் பரிந் துரைகளை aavanna19@ gmail.com அல்லது subaaruna99@ gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ புளோக் 723 #13-149, யீஷூன் ஸுதிரீட் 71, சிங்கப்பூர் 760723 எனும் முகவரிக்கோ 15.11.2016க் குள் அனுப்பி வைக்கவேண்டும். இம்மாதம் 26ஆம் தேதி நடைபெறும் கவியரசு கண்ணதாசன் விழாவில் விருது வழங்கப்படும்.