முஹம்மது ஃபைரோஸ்
சிங்கப்பூர் தமிழ் எழுத்துலகில் விமர்சனக் கலை சிறப்பான நீண்ட பாரம்பரியத்தை உடையது. பல எழுத்தாளர்கள் படைப்புகளைக் குறித்து நாளிதழ்களிலும் சஞ்சி கைகளிலும் அனல் பறக்கும் விமர் சனங்களை முன்னெடுத்துள்ளார் கள்.
அவ்வாறு, சிங்கப்பூரின் இன்றைய எழுத்துலகில் விமர் சனத்தின் நிலை, எதிர்காலத் தேவை ஆகியவைப் பற்றி தமிழ் இலக்கியவாதிகள் பங்கேற்ற கலந் துரையாடலில் நேற்று ஆராயப் பட்டன. ஆண்டுதோறும் நடைபெறும் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் ஓர் அங்கமாக நேற்று 'தி ஆர்ட்ஸ் ஹவுஸில்' நடந்த கலந்துரையாட லில் எழுத்தாளர்கள் இராம. கண்ணபிரான், கனகலதா, சித்ரா ரமேஷ் ஆகியோர் விமர் சனம் குறித்து பேசினர். கலந்துரையாடலைத் தொடங்கி வைத்து வழிநடத்திய டாக்டர் சித்ரா சங்கரன், இலக்கிய வரலாற்றில் விமர்சனம் குறித்த பார்வையைப் பங்கேற்பாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவை முன்னிட்டு சிங்கப்பூர் தமிழ் எழுத்துலகில் விமர்சனக் கலை குறித்து பேசும் எழுத்தாளர்கள் (இடமிருந்து) சித்ரா ரமேஷ், இராம.கண்ணபிரான், லதா. படம்: திமத்தி டேவிட்