பாதங்களில் ஏற்படும் வெடிப்பினை ஆரம்பித்திலேயே கவனிக்கா விட்டால், பிளவு ஆழமாக சென்று பின் மறைவது கடினமாகிவிடும். எவ்வாறு முகம், கை, கால், கூந்தல் என ஒவ்வொன்றிற்கும் சரியான பராமரிப்புகளை மேற் கொள்கிறோமோ அதேபோல் பாதங்களையும் பராமரிக்க வேண் டும். ஏனெனில் மற்ற இடங்களைவிட பாதங்களில்தான் அதிகமான அளவில் அழுக்குகள் நிறைந்து இருக்கும். அத்தகைய அழுக்கு களைச் சரியாக நீக்காமல் இருப்பதால் முகம், கைகள் ஒரு நிறத்திலும் பாதங்கள் வேறொரு நிறத்திலும் இருக்கும்.
அவ்வப்போது கால்களில் உள்ள அழுக்குகளை நீக்கு வதற்கான பராமரிப்பில் ஈடுபட வேண்டும். இதற்காக அழகு நிலையங் களுக்குச் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. தினமும் குளிக்கும் நேரத்தில் பாதங்களுக்கென ஒரு சில நிமிடங்கள் ஒதுக்கினாலே போதும் வெடிப்புகளைத் தவிர்க்கலாம். வெளியே போய்விட்டு வீட்டிற்கு வந்ததும் பாதங்களை வெது வெதுப்பான நீரால் நன்கு சுத்தமாக கழுவவேண்டும். அவ்வாறு கழுவும்போது நகங்களையும் தேய்த்துக் கழுவவேண்டும். ஃப்யூமிஸ் கல்லைக் கொண்டு தினமும் தேய்த்தால் பாதத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி, கருமை அகன்று, வெடிப்புகள் மறைந்து சுத்தமான பாதமாகி விடும். சுத்தமான பாதத்தை வீட்டில் இருக்கும் ஒரு சிலப் பொருட்களை வைத்தே பொலிவான பாதங்களாக பெற மாற்ற முடியும். பாதங்களின் அழகைப் பராமரிப் பதற்கான இயற்கைப் பராமரிப்பு முறையான இது, அழகு நிலையங் களில் வழங்கப்படும் 'பெடிகியூர்' முறையைவிட எளிதானது, ஆரோக்கியமானது.
விவரம் - அச்சுப் பிரதியில்