கேரளாவில் ஆலப்புழா, குமரகோம் போன்ற இடங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக படகு வீடூகள் வாடகைக்கு கிடைக் கின்றன. மனதிற்கு ரம்மியமான காட்சி களுக்கு மத்தியில் நீர்நிலைகளின் அழகைக் கண்டு மகிழ ஆலப் புழாவின் கால்வாய் வழியாக வரும் காற்றை நுகர்ந்தபடி செல்ல நாட்டுப்படகைத் தேர்வு செய்யலாம். கால்வாய் பயணம் வேம்பநாடு ஏரியின் ஒரு பகுதியாக உள்ளது. கால்வாயின் ஓரமாகப் படகில் செல்லும்போது காணும் காட்சிகள் மனதைப் பறிக்கும். பருவத்திற்குத் தகுந்தாற்போல் படகு கட்டணங்கள் வசூலிக்கப் படுகின்றன. அக்டோபர், நவம்பர் மாதங்களில் சென்றால் கட்டணம் குறைவாக இருக்கும். அதுபோல் குமரகோமைவிட ஆலப்புழாவில் படகு இல்லத்திற் கான கட்டணம் குறைவு என்றும் கூறப்படுகிறது.
படகு வீட்டிலுள்ள அறைகள் ஒவ்வொன்றும் சொகுசு தங்கு விடுதிகளுக்கு இணையாக உள்ளன.