ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) இம்மாதம் 12ஆம் தேதி பாசிர் ரிஸ் பூங்காவில் பல இனத்தவர் கலந்து கொண்ட குடும்ப தின விழாவைக் கொண் டாடியது. முதியோரைப் போற்றிப் பரா மரிப்பதன் அவசியத்தை வலியுறுத் துவது இவ் விழாவின் கருப் பொருள். ஸ்ரீ நாராயண மிஷன் இல்லத்தில் வசித்து வரும் முதியோர்கள் சிலர் இந்த நல் லிணக்க குடும்ப தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். விழாவில் கலந்துகொண்ட பல இன சமூகங்களைச் சேர்ந்த முதியவர்களுடன் சங்க உறுப்பினர்களும் மாணவர்களும் கலந்து உரையாடியதுடன், அவர்களுக்கு புத்தாடைகளையும் அன்பளிப்பாக வழங்கினர்.
ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்த குடும்ப தினத்தில் பங்கேற்ற முதியவர்களுடன் சங்க உறுப்பினர்கள். படம்: ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்