ஏடிஸ் வகை கொசுக்கள்
கடிப்பதன் மூலம் டெங்கிக் காய்ச்சல் பரவுகிறது. இது உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்
கூடியதாகும்.
இவ்வாண்டில் அதிகமானோர் டெங்கியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியுள்ளது.
கொசுப் பெருக்கத்திற்கு 20 காசு அளவுள்ள தண்ணீரே போதுமானதாகும்.
நீங்கள் டெங்கி குழுமமுள்ள வட்டாரத்தில் வசிப்பவராக இருந்தால் வீட்டைச் சுற்றி இருட்டான மூலைகளில் பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்து வையுங்கள்.
அறிகுறிகள்
கடுமையான காய்ச்சல், வயிற்றுவலி, தாங்க முடியாத அளவு தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, கண்ணுக்குப் பின்புறம் வலி, தொடர்ச்சியான வாந்தி, களைப்பு ஆகியவை டெங்கிக்கான அறிகுறிகள்.
எலும்புகளை முறித்துப் போட்
டதுபோல் எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படுவது, இந்த நோயை இனம்காட்டும் முக்கிய அறிகுறி. வாந்தியும் வயிற்றுவலியும் ஆபத்தான அறிகுறிகள். அடுத்து உடலில் அரிப்பு ஏற்படும். சிவப்புப் புள்ளிகள் தோன்றும்.
ஆபத்து எப்போது?
பெரும்பாலோருக்கு ஏழாம் நாளில் காய்ச்சல் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் காய்ச்சல் குறைந்ததும் ஓர் அதிர்ச்சி நிலை (Dengue Shock Syndrome) உருவாகும். அந்த நிலை ஏற்பட்டால் ஆபத்து அதிகம்.
அவர்களுக்கு கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப்போகும். சுவாசிக்கச் சிரமப்படுவார்கள். ரத்த அழுத்தமும் நாடித் துடிப்பும் குறைந்து சுயநினைவை இழப்பார்கள்.
டெங்கி நோய்த்தொற்று ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழித்துவிடும். இந்த தட்டணுக்கள்தான் ரத்தம் உறை
வதற்கு உதவும் முக்கிய அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, பல் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்புமூட்டு ஆகியவற்றில் ரத்தக் கசிவு ஏற்படும். இதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பு
ஏற்படும்.
பக்கவிளைவுகள்
நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி இருந்தால் எந்த நோயிலிருந்தும் மீள்வது எளிது.
எனினும் டெங்கி காய்ச்சல் காரணமாக, உடலில் உள்ள 'பிளேட்லெட்' எனப்படும் ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகும். மேலும் ரத்த அணுக்களை நிறமற்றதாக மாற்றுவதால் ரத்த உறைவு பிரச்சினையையும் எதிர்கொள்ள நேரிடும்.
அப்படி 'பிளேட்லெட்' எண்ணிக்கை குறைவாக இருக்கும் பட்சத்தில் நோய் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு கால அவகாசம் தேவைப்படும்.
அப்போது சில பக்க விளைவுகள் ஏற்படலாம். எனினும் டெங்கி நோய்த்தொற்றால் நீண்டகால பக்கவிளைவுகள் ஏற்படாது என்பதே மருத்துவர்களின் கருத்து.
டெங்கி காய்ச்சல் உடலை பலவீனப்படுத்தி தசை மற்றும் மூட்டுகளில் வலிகளை ஏற்படுத்தும். எழுந்து நடமாட முடியாத நிலையையும் சிலருக்கு ஏற்படும். நோய் பாதிப்பில் இருந்து மீள்
வதற்கு பத்து முதல் பதினைந்து நாட்கள் ஆகும்.
ஒருமுறை டெங்கி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் நோய் எதிர்ப்பு சக்தி மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்புவதற்கு சில மாதங்கள்
ஆகும்.
அதற்குள் இரண்டாவது முறையாக டெங்கி காய்ச்சல் ஏற்பட்டால் பாதிப்பு கடுமையாக இருக்கும். அதனால் நோய் பாதிப்பு ஏற்பட்டவுடன் மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இரும்புச் சத்து, போலிக் அமிலம், வைட்டமின் பி12, வைட்டமின் சி போன்ற வைட்டமின்கள் உள்ள உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.