மறைந்த அர்ஜென்டினா காற்பந்து நட்சத்திரம் டியேகோ மரடோனா 1986ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாம் சுற்று ஆட்டத்தில் விளையாடிய பந்து இரண்டு மில்லியன் பவுண்டுக்கு (3.27 மில்லியன் வெள்ளி) ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. அந்த ஆட்டத்தில் விதிமுறைகளை மீறி மரடோனா கையால் ஒரு கோலைப் போட்டார். கோலைப் போட்டது தனது கையன்று, 'ஆண்டவனின் அற்புதக் கை' என்று அவர் செல்லமாகக் கூறியது வரலாற்றில் நீங்கா இடம்பிடித்தது. அதே ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஏழு விளையாட்டாளர்களைத் தாண்டி அபாரமான ஒரு கோலையும் போட்டார் மரடோனா. 2-0 எனும் கோல் கணக்கில் அர்ஜென்டினா வென்றது.
படம்: ஏஎஃப்பி