தோஹா: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி நடைபெறும்போது வெறுப்பையும் பிரிவினையையும் தூண்டும் பேச்சு இணையத்தில் இடம்பெறுவதைத் தவிர்க்க அனைத்துலகக் காற்பந்துக் கூட்டமைப்பு புதிய சேவை ஒன்றைத் தொடங்குகிறது.
சமூக ஊடகப் பாதுகாப்பு சேவை என்றழைக்கப்படும் அது, விளையாட்டாளர்கள் இணையத்தில் மோசமான கருத்துகளைப் பார்ப்பதைத் தவிர்க்க உதவும். அதற்கு வகைசெய்ய அனைத்துலகக் காற்பந்துக் கூட்டமைப்பு, உலகக் கிண்ணப் பங்கேற்பாளர்களின் சமூக ஊடகக் கணக்குகளைக் கண்காணிக்கும்.