பேரம்பலம்

பேரம்பலம்

1 mins read
f6095798-4bfb-4187-a274-62ddacf205a3
-
Google News Preferred Icon

லதா

சாலை கடந்து ஓடுவதற்குள்

பிடித்துவிட்டது மழை

ஒளியக் குடையுமில்லை பக்கத்தில்

கூரைவேய்ந்த பாதையுமில்லை

மழைதானே என்ன செய்யப் போகிறது என்கிறாள்

தள்ளாடி நடக்கும் முதுபெண்

அவள் நனைந்திருப்பாள் ஆயிரம் மழை

முதல் மழை எல்லாருக்கும் ஒன்றா என்ன,

யாரும் பார்க்க எவரும் மழையில் கரைவதில்லை

மனமென வெடித்த மேகம்

நினைவெனக் கொட்டும் மழை

எங்குதான் ஒளிவீர் இறைவரே

குறிப்புச் சொற்கள்
லதாகவிதைகதை/கவிதைஞாயிறு முரசு