தங்கையுடன் முறையற்ற உறவு; குற்றத்தை ஒப்புக்கொண்ட இளையர்

தம்முடைய தங்கையுடன் தகாத உறவு கொண்ட இரு குற்றச்சாட்டுகளை 15 வயது இளையர் ஒருவர் மலேசிய நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். அவரின் செயல் காரணமாக கர்ப்பமடைந்த அவருடைய தங்கை, இறுதியில் ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார்.

தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்த்து அந்த இளையர் முறையிடவில்லை.

2022 ஜூன் 21ஆம் தேதிக்கும் ஜூன் 30ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நெகிரி செம்பிலான் மாநிலம், ஜெம்போலில் உள்ள ஒரு வீட்டில் இரவு 11 மணிக்கும் நள்ளிரவுக்கும் இடையே தம்முடைய 14 வயதுச் சகோதரியுடன் முறையற்ற உறவு கொண்டதாக அந்த இளையர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

2022 செப்டம்பர் 1ஆம் தேதிக்கும் செப்டம்பர் 10ஆம் தேதிக்கும் இடையே அதே வீட்டில் அதே நேரத்தில் அந்த இளையர் மீண்டும் குற்றம் புரிந்ததாகக் கூறப்படுகிறது.

பிப்ரவரி 16ஆம் தேதி தம் வீட்டின் குளியலறையில் அச்சிறுமி குழந்தையை ஈன்றெடுத்தார். அவருடைய தாயார் பிரசவத்திற்கு உதவினார்.

அந்த இளையரை 4,000 ரிங்கிட் (S$1,200) பிணையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது.

ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியில் அருகிலுள்ள காவல் நிலையில் முன்னிலையாக வேண்டும் என அவருக்கு உத்தரவிடப்பட்டது.

பாதிக்கப்பட்ட அச்சிறுமியிடம் இருந்து தள்ளியிருக்குமாறும் அவரை எந்த வகையிலும் தொடர்புகொள்ளக்கூடாது என்றும் நீதிபதி அந்த இளையருக்கு உத்தரவிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!