சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ஃபெராரி ஆடம்பர கார், ஜோகூரில் மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் டொயோட்டா கார் ஒன்றின் பின் பக்கம் இடித்த விபத்தில் டொயோட்டா காரில் இருந்த மலேசியர் நால்வர் காயம் அடைந்தனர்.
இச்சம்பவம் ஜோகூரில் வெள்ளிக்கிழமை காலை 7.25 மணிக்கு நிகழ்ந்ததாக மலேசிய காவல்துறை தெரிவித்தது.
வெள்ளை நிற ஃபெராரி காரை ஓட்டிவந்த சிங்கப்பூரரான 22 வயது ஆடவர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து டொயோட்டா கார் மீது இடித்துவிட்டதாக மூவார் மாவட்ட காவல்துறை தலைவர் ரியாஸ் முக்லிஷ் அஸ்மான் அஜிஸ் கூறினார்.
இதன் விளைவாக இரண்டு வாகனங்களும் சாலையின் வலது பக்கம் சறுக்கி ஓடியதாக அந்த அதிகாரி கூறியதாக மலாய் நாளிதழ் கோஸ்மோ தெரிவித்தது.
காயம் அடைந்த மலேசியர்களுக்கு வயது 50க்கும் அதிகம் என்று அந்த அதிகாரி கூறினார்.
ஃபெராரி காரை ஓட்டிவந்தவர் காயம் அடைந்தாரா என்பது தெரியவில்லை.