பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் கூடைப்பந்துப் போட்டி ஒன்றின் தொடக்க விழாவில் நேற்று தவறான மலேசியக் கொடி காண்பிக்கப்பட்டதற்காக மலேசியக் கூடைப்பந்து சங்கம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
தொடக்க விழாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது விளையாட்டரங்கின் தொலைக்காட்சித் திரைகளில் அந்த மலேசியக் கொடியும் ‘வெஸ்ட்போர்ட்’ எனும் நிறுவனத்தின் சின்னமும் காண்பிக்கப்பட்டன.
மலேசியக் கொடி, 13 மாநிலங்களையும் கூட்டரசுப் பிரதேசத்தையும் குறிக்க 14 முனை நட்சத்திரத்தையும் 14 சிவப்பு, வெள்ளைக் கோடுகளையும் கொண்டிருக்கும்.
ஆனால், கூடைப்பந்துப் போட்டியின் தொடக்க விழாவில் காண்பிக்கப்பட்ட கொடியில் 5 முனை நட்சத்திரம்தான் இருந்தது.
“தவறான மலேசியக் கொடி காண்பிக்கப்பட்டது. தவற்றுக்கு வருந்துகிறோம். நிகழ்ந்த தவற்றுக்கு முழுப் பொறுப்பும் எங்களுடையதே,” என மலேசியக் கூடைப்பந்து சங்கம் விவரித்தது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity