டாக்சி ஓட்டுநரிடம் கொள்ளையடிக்க முயற்சி செய்த பயணி; தக்க சமயத்தில் உதவிய போலிசார்

சுமார் 66 வயதான டாக்சி ஓட்டுநரிடமிருந்து கொள்ளையடிக்க முயன்றதாக 38 வயது ஆடவரை போலிசார் சாபாவின் சண்டக்கான் பகுதியில் கைது செய்தனர்.

கைதான ஆடவர் அந்த டாக்சியின் பயணி என்றும் சிபுகாவை நோக்கி கார் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் தோள் பையை அவர் பிடுங்கியதாகவும் கூறப்பட்டது.

காரை நிறுத்திவிட்டு தமது தோள் பையை அந்த ஆடவரிடமிருந்து மீட்கப் போராடினார் டாக்சி ஓட்டுநர்.

தக்க சமயத்தில் அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த இரண்டு போலிஸ்காரர்கள் காருக்குள் நடந்த போராட்டத்தைக் கண்டு காருக்கு அருகில் சென்றனர்.

போலிசாரைக் கண்டதும் தப்பி ஓட அந்த இளைய ஆடவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்தச் சம்பவத்தில் டாக்சி ஓட்டுநர் காயங்கள் ஏதுமின்றி தப்பினார்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்ததை சண்டக்கான் பகுதி போலிஸ் உயர் அதிகாரி முகமது அஸார் ஹமின் உறுதிசெய்தார்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!