மழை வெள்ளத்தால் தப்பியோடிய வளர்ப்பு முதலைக் குட்டி

சரவாக்கின் லிம்பாங் நகரில் உள்ள ஒரு வீட்டிலிருந்து வளர்ப்பு முதலைக் குட்டி ஒன்று மழை வெள்ளத்தில் ஊர்ந்து தப்பியதையடுத்து மலேசிய தீ மற்றும் மீட்புத் துறை அதிகாரிகளின் உதவி நாடப்பட்டது.

கடந்த சனிக்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் கம்போங் கிமோக்கில் உள்ள ஒரு வீட்டிலிருந்து முதலைக் குட்டி தப்பியதாக மலேசிய தீ மற்றும் மீட்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது.

தண்ணீர்த் தொட்டிக்குள் இருந்த முதலைக் குட்டி மழை வெள்ளத்தில் கலந்து அந்த வீட்டிலிருந்து தப்பி அருகில் இருந்த குட்டைக்குள் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

குட்டைக்குள் விழுந்த முதலைக் குட்டி கோபத்துடன் சீறியதால் அதனை வளர்த்து வந்தவர் அதிகாரிகளின் உதவியை நாடினார்.

1.2 மீட்டர் நீளமுள்ள அந்த முதலைக் குட்டியை அதிகாரிகள் பிடித்தனர். அதனை மீண்டும் அதன் உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக தங்களுடன் கொண்டு சென்றனர்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!