மலேசியாவில் உணவகத்துக்குள் புகுந்த கார்

ஓர் உணவகத்தில் பலர் உணவருந்திக்கொண்டிருந்தபோது கார் ஒன்று உணவகத்துக்குள் புகுந்ததைக் காட்டும் காணொளி ஒன்று இணையத்தில் வலம் வருகிறது.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமில்லை.

எஸ்ஜே எக்கோ எனும் சமூக செய்தித்தாளின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்ட இந்தக் காணொளியை சுமார் 95,000 பேர் பார்த்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் யுஇபி சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு உணவகத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது.

காரை ஓட்டி வந்த வயதான பெண்மணி ‘பிரேக்’மீது கால் வைப்பதற்குப் பதிலாக ‘ஆக்சலரேட்டர்’ மீது தவறுதலாகக் காலை வைத்து விட்டதாக சுபாங் ஜெயா நகர மன்ற கவுன்சிலர் லீ ஜென் உயின் கூறினார்.

ஆனால், இந்தச் சம்பவம் குறித்து புகார் எதுவும் பெறப்படவில்லை என போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!