மலேசியா: உணவகங்களில் புகைபிடித்தால் அபராதம்

ஜார்ஜ் டவுன்: உணவகங்களில் புகைப்பிடிப்பவர் களுக்கு அபராத விதிக்கும் சட்டம் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று சுகாதார துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் நேற்று சொன்னார்.

இந்த நடவடிக்கைக்காக நாடு முழுவதும் சுமார் 5,000 சுற்றுச்சூழல் சுகாதார அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தடையை மீறுபவர்களுக்கு சம்மன் அனுப்ப அங்கொன்றும் இங்கொன்றுமாக சோதனைகளை மேற்கொள்வார்கள்.

முதல் குற்றத்திற்கு 250 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும்.

இது செலுத்தப்படாமல் விடப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டால், 10,000 ரிங்கிட் வரை உயரக்கூடும்.

"புகைபிடிப்பவர்கள் மற்றவர்களுக்கு முன்னால் புகைபிடிக்காத பழக்கத்தை மாற்றிக் கொள்ளலாம், ஏனென்றால் இரண்டாவது புகை மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று எங்களுக்குத் தெரியும்," என்று அவர் கூறினார்.

எலக்ட்ரானிக் நிக்கோடின் டெலிவரி சிஸ்டம்ஸ் அல்லது ‘வேப்களைப்’ பயன்படுத்துபவர்கள் புகைபிடிப்பவர்களைப் போலவே கருதப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

வயதுவந்தோரின் புகைபிடித்தல் விகிதம் இப்போது 21 விழுக்காடாக இருப்பதாக டாக்டர் லீ கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!